General03 August 2026

அதிகரிக்கும் வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!

நாட்டின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பநிலை தொடர்பான விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவானது, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கணக்கிட்டே இந்த வெப்ப சுட்டெண் கணிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது வெளியில் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ உடற்சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ச்சியாக வெளியில் பணியாற்றுவது தசைப் பிடிப்புக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes