General03 August 2026

களனி கங்கை தாழ்நிலப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி நேரம் நீடிப்பு

களனி கங்கை தாழ்நிலப் பகுதிக்காக முன்னதாக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், அந்தப் பகுதிகள் வழியாக, குறிப்பாக குறுக்கு வீதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes