General03 August 2026

கொழும்பு - கண்டி வீதி கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டது!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியை கடுண்ணாவ பகுதியில் இன்று (3) பிற்பகல் 3 மணி முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், வாகனச் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes