General03 August 2026

ரத்கம கடற்கரையில் கரை ஒதுங்கிய கொள்கலன் - காவல்துறையினர் விசாரணை!

காலி - ரத்கம - ஓவகந்த கடற்கரையில் வெள்ளை நிறக் கொள்கலன் ஒன்று இன்று (03) காலை கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கடற்பரப்பிற்கு அருகில் பயணித்த கப்பல் ஒன்றில் இருந்து நேற்று (2) கடலில் வீழ்ந்து காணாமற்போன வெற்றுக் கொள்கலன்களில் ஒன்றாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரத்கம காவல்துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, தென் மாகாண சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கொள்கலனைப் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கடற்கரையில் சிதறிக் கிடந்த ரெஜிபோம் துண்டுகள் உள்ளிட்ட கழிவுகளை அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes