General03 August 2026

களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

இரத்தினப்புரி மாவட்டத்தில், பெல்மதுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் களு கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes