General03 August 2026

சீரற்ற வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலை நாளை (04) காலை வரை நீடிக்கும் என்றும், நண்பகலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜப்பானுக்குத் தெற்கே பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சூறாவளியின் தாக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் இலங்கையில் உணரப்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதியிலிருந்து சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை அதிகரிக்கக் கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related recommendation
Hiru TV News | Programmes