அழைப்பாணை கிடைக்கப் பெற்றதும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு, கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (8 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் யோஷித ராஜபக்ஷ பிரித்தானியாவில் உள்ள 'பிரித்தானிய அரச கடற்படை கல்லூரியில்' பயிற்சி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சியில் பங்குபற்றுவதற்கான தகுதிகள் இல்லாத நிலையிலும் நடைமுறைகளை மீறி யோஷித ராஜபக்ஷ முறையற்ற விதத்தில் அரச நிதியிலான இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவர்களுக்கான அழைப்பாணை கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு, கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (8 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் யோஷித ராஜபக்ஷ பிரித்தானியாவில் உள்ள 'பிரித்தானிய அரச கடற்படை கல்லூரியில்' பயிற்சி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சியில் பங்குபற்றுவதற்கான தகுதிகள் இல்லாத நிலையிலும் நடைமுறைகளை மீறி யோஷித ராஜபக்ஷ முறையற்ற விதத்தில் அரச நிதியிலான இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவர்களுக்கான அழைப்பாணை கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Latest News
சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களை முடக்க உத்தரவு: தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு TRCSL அறிவுறுத்தல்
Local
04 August 2026
செங்கடலில் தாக்குதலுக்கு இலக்கான இந்தியக் கப்பல் மூழ்கியது: 13 இந்தியர்கள் உட்பட 14 பணியாளர்கள் மீட்பு
Local
04 August 2026
காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Local
04 August 2026
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Local
04 August 2026
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!
Local
04 August 2026
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்
Local
04 August 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
04 August 2026
உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது: சீமான் சாடல்
Local
04 August 2026
கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு: படகு சவாரிக்கும் தற்காலிகத் தடை!
Local
04 August 2026
உலக சந்தையில் அதிரடியாக குறையப்போகும் எரிபொருள் விலை?
Local
04 August 2026