இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா வழங்கிய 'மெலத்தியன்' (Technical Malathion) பூச்சிக்கொல்லி மருந்துத் தொகுதி, சுகாதார அமைச்சிடம் இன்று (4) உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இந்த மருந்துத் தொகுதியை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மெலத்தியன் மருந்தினை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இந்திய உயர்ஸ்தானிகருக்கு சுகாதார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இத்தகைய 'தொழில்நுட்ப மெலத்தியான்' மருந்து பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர கருத்துத் தெரிவிக்கையில், "தற்போது டெங்கு பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்த மெலத்தியன் மருந்துத் தொகுதி, டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் உதவியாகவும் அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பும் ஆர்வமும் எப்போதும் இல்லாதவாறு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இந்த மருந்துத் தொகுதியை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மெலத்தியன் மருந்தினை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இந்திய உயர்ஸ்தானிகருக்கு சுகாதார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இத்தகைய 'தொழில்நுட்ப மெலத்தியான்' மருந்து பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர கருத்துத் தெரிவிக்கையில், "தற்போது டெங்கு பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்த மெலத்தியன் மருந்துத் தொகுதி, டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் உதவியாகவும் அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பும் ஆர்வமும் எப்போதும் இல்லாதவாறு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
தெற்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் கடும் கொந்தளிப்பு: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
06 August 2026
எல் நினோ தாக்கம்: மொனராகலை மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை
Local
06 August 2026
பேருந்துப் பயணக் கட்டணத்தை அட்டைகள் மூலம் செலுத்தும் முறை விரைவில்
Local
06 August 2026
ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்
Local
06 August 2026
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் விலையிலும் மாற்றமில்லை
Local
06 August 2026
தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்
Local
06 August 2026
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை
Local
06 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு
Local
06 August 2026
வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை
Local
06 August 2026
விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
06 August 2026