இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா வழங்கிய 'மெத்தியன்' (Technical Malathion) பூச்சிக்கொல்லி மருந்துத் தொகுதி, சுகாதார அமைச்சிடம் இன்று (4) உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இந்த மருந்துத் தொகுதியை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மெலத்தியன் மருந்தினை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இந்திய உயர்ஸ்தானிகருக்கு சுகாதார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இத்தகைய 'தொழில்நுட்ப மாலத்தியான்' மருந்து பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர கருத்துத் தெரிவிக்கையில், "தற்போது டெங்கு பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்த மெலத்தியன் மருந்துத் தொகுதி, டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் உதவியாகவும் அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பும் ஆர்வமும் எப்போதும் இல்லாதவாறு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இந்த மருந்துத் தொகுதியை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மெலத்தியன் மருந்தினை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இந்திய உயர்ஸ்தானிகருக்கு சுகாதார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இத்தகைய 'தொழில்நுட்ப மாலத்தியான்' மருந்து பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர கருத்துத் தெரிவிக்கையில், "தற்போது டெங்கு பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்த மெலத்தியன் மருந்துத் தொகுதி, டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் உதவியாகவும் அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பும் ஆர்வமும் எப்போதும் இல்லாதவாறு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
இரத்மலானை வீடொன்றின் மீது அடுத்தடுத்து வீசப்பட்ட 2 கைக்குண்டு : பதற்றத்தில் அப்பகுதி மக்கள்!
Local
05 August 2026
ரூ.1.10 கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் 31 வயது நபர் கைது : அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய பின்னணி!
Local
05 August 2026
சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களை முடக்க உத்தரவு: தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு TRCSL அறிவுறுத்தல்
Local
04 August 2026
செங்கடலில் தாக்குதலுக்கு இலக்கான இந்தியக் கப்பல் மூழ்கியது: 13 இந்தியர்கள் உட்பட 14 பணியாளர்கள் மீட்பு
Local
04 August 2026
காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Local
04 August 2026
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Local
04 August 2026
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!
Local
04 August 2026
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்
Local
04 August 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
04 August 2026
உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது: சீமான் சாடல்
Local
04 August 2026