தெஹிவளை, கடவத்த வீதியில் அமைந்துள்ள தஹநாயக்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்றிரவு வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இரவு 8.10 மணியளவில் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரில் ஒருவரே குறித்த தாக்குதலை நடத்த முயன்றுள்ளார் எனக் கூறினார்.
இருப்பினும், துப்பாக்கி இயங்காததால் உடனடியாகச் செயற்பட்ட வெதுப்பக உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் போராடி துப்பாக்கியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி மற்றும் உந்துருளியை செலுத்தி வந்தவரைக் கைது செய்வதற்காக தெஹிவளை காவல்துறையினர் 2 விசேட காவல்துறை குழுக்களை நியமித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையில் மாற்றமில்லை
Local
06 August 2026
"இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன்" : 'சீதா ராமம்' திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள நெகிழ்ச்சி தகவல்!
Local
06 August 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் படகு விபத்து - 11 இந்திய கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு
Local
06 August 2026
2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு : 5 நாடுகளிடம் இலங்கை சட்ட உதவி கோரிக்கை
Local
06 August 2026
கடும் மழையின் எதிரொலி: ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறங்கும் அபாயம்
Local
06 August 2026
யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை தீவிரம்!
Local
06 August 2026
சுவிட்ஸர்லாந்தில் பரவும் நோய் : ஒருவர் பலி - 28 பேர் பாதிப்பு!
Local
06 August 2026
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு
Local
06 August 2026
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026