General05 August 2026

ரூ.1.10 கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் 31 வயது நபர் கைது : அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய பின்னணி!

கம்பஹா - மினுவாங்கொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகஹவத்த சந்திக்கு அருகில், 11 கிலோ 844 கிராம் கஞ்சா மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின்போதே, இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர், கெஹெல்பத்தர பத்மே என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய மல்க என்பவரின் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes