General05 August 2026

சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளர் வழக்கு – ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் பதவி தொடர்பான வழக்கு கட்டளைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்தும்,நகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் தம்மை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான விவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,இன்று தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.

எனினும், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையை பிறப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதனால், குறித்த மனு தொடர்பான நீதிமன்றத்தின் அடுத்த கட்ட உத்தரவு ஓகஸ்ட் 19ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes