2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் திருட்டுக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சாம்பியா உள்ளிட்ட ஐந்து நாடுகளிடம் இலங்கை பரஸ்பர சட்ட உதவியை கோரியுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளே இலங்கை சட்ட உதவி கோரியுள்ள ஏனைய நாடுகளாகும்.
கடன் சேவையின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் திருட்டுக்குள்ளான விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விசாரணை நிலவரங்கள் கருதி மேலதிக விபரங்களை வெளிப்படுத்த மறுத்ததுடன், அந்தத் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக உறுதிபடக் கூறினார்.
அதேவேளை, விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதித் திருட்டுத் தொடர்பாக நிதியமைச்சை கடுமையாக விமரிசித்தனர்.
இந்தத் தவறுக்கு நிதியமைச்சின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தெளிவுபடுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளே இலங்கை சட்ட உதவி கோரியுள்ள ஏனைய நாடுகளாகும்.
கடன் சேவையின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் திருட்டுக்குள்ளான விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விசாரணை நிலவரங்கள் கருதி மேலதிக விபரங்களை வெளிப்படுத்த மறுத்ததுடன், அந்தத் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக உறுதிபடக் கூறினார்.
அதேவேளை, விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதித் திருட்டுத் தொடர்பாக நிதியமைச்சை கடுமையாக விமரிசித்தனர்.
இந்தத் தவறுக்கு நிதியமைச்சின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தெளிவுபடுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டினார்.
Latest News
ஈரான் மீதான போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் எனத் தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!
Local
07 August 2026
பாலஸ்தீன நிலத்தில் இருந்து மரங்களை அகற்றும் இஸ்ரேல்!
Local
07 August 2026
ஈரான் விடயத்தில் தோல்வியடைந்த அதிகாரிகளை தண்டித்த இஸ்ரேல்!
Local
07 August 2026
தனது கின்னஸ் உலக சாதனையைத் தானே மீண்டும் புதுப்பித்த பெண்!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் பதற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது: காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை!
Local
06 August 2026
மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 250 மெட்ரிக் தொன் 'பெய்லி' பாலங்களை வழங்கியது இந்தியா!
Local
06 August 2026
காவல்துறை மாஅதிபரின் பாதுகாப்பு மற்றும் சாகர காரியவசமின் சர்ச்சை பேச்சு: விசாரணைகளைத் தொடர நீதிமன்றம் அனுமதி!
Local
06 August 2026
அனுமதியற்ற 146 சூதாட்ட இணையதளங்களை முடக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உத்தரவு!
Local
06 August 2026
தெற்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் கடும் கொந்தளிப்பு: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
06 August 2026