General07 August 2026

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!

சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முதல் தங்களது விடுதிகளுக்குத் திரும்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes