General07 August 2026

லலித் – குகன் காணாமற்போன வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி ஊடாக சாட்சியமளிக்க உத்தரவு

2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி அழைப்பின் ஊடாக சாட்சியமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு காணொளி அழைப்பின் ஊடாக அவர் சாட்சியமளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes