சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ,இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதால் விளக்கமறியலில் உள்ள கைதிகள் பிணை பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்ய 70 புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய நவீன இயந்திரங்களும் கொண்டுவரப்படவுள்ளன.
இதன் மூலம் மாதமொன்றிற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளை விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மேல்நீதிமன்றங்கள் மூலமாகவே விரைவாக பிணை பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.
மேலும், போதைப்பொருள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மேல்நீதிமன்றங்கள் மூலமாகவே விரைவாக பிணை பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.
எனவே, சிறைச்சாலைக்குள் ஒரு சிலர் ஏற்படுத்தும் வன்முறைகளுக்கோ அல்லது சதித்திட்டங்களுக்கோ பலியாகாமல் பொறுமையுடன் செயற்படுமாறும், அரச உடைமைகளுக்கோ அல்லது சிறைச்சாலைச் சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்க வேண்டாம் என்றும் கைதிகளிடம் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
10 August 2026
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Local
10 August 2026
கிழக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு
Local
10 August 2026
கேகாலையில் தாமதமாக வழங்கப்பட்ட வினாத்தாள்: இருவேறு கோணங்களில் விசாரணை!
Local
10 August 2026
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிறாரா நடிகர் தனுஷ்?
Local
10 August 2026
தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!
Local
10 August 2026
கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
10 August 2026
கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் கடுவல நீதிமன்றத்தில் முன்னிலை
Local
10 August 2026
மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!
Local
10 August 2026
‘டேர்டெவில்’ திரைப்படத்தின் கதை இப்படி தான் இருக்கும்: மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்
Local
10 August 2026