உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அரசாங்கம் இந்த திருத்தத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள நிலையில், இந்தத் திருத்தத்தைக் கைவிட அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகச் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு எச்சரித்துள்ளது.
"பிரதம நீதியரசர் அறுபத்தேழு வயதை அடையும் திகதி அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் திகதி ஆகிய இரண்டில் எது முந்தியதோ அதுவே அவரது ஓய்வுபெறும் திகதியாக அமையும் என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அனுர மெத்தேகொட, சட்டத்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த நகர்வுக்கு எதிராகப் படிப் படியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
"தேவையேற்பட்டால் தாங்கள் வீதியில் இறங்கிப் போராடப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியலமைப்பில் தற்காலிகத் திருத்தங்களைச் செய்வதை விட, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதே சிறந்த தேர்வாக இருக்கும் என்று மெத்தேகொட கூறியுள்ளார்.
Latest News
LPL இறுதிப் போட்டி - கிண்ணத்தை வென்றது காலி அணி!
Local
08 August 2026
இலங்கையில் உச்சத்தைத் தொட்ட டெங்கு!
Local
08 August 2026
LPL இறுதிப் போட்டி - காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
Local
08 August 2026
கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்
Local
08 August 2026
எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!
Local
08 August 2026
இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!
Local
08 August 2026
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!
Local
08 August 2026
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!
Local
08 August 2026
கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு
Local
08 August 2026
சக வீராங்கனையுடன் தொடர்பு: அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி மீது முன்னாள் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு!
Local
08 August 2026