பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடமத்திய, வடமேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சில கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளுக்குள் படகுகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Latest News
30 ஆண்டுகளில் இரட்டிப்பான உடல் பருமன்: 1.4 கோடி மக்கள் பாதிப்பு!
Local
09 August 2026
பங்களாதேஷை பதறவைத்த 22 வயது இளம் புயல் - 54 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ்
Local
09 August 2026
42 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: கொங்கோ அதிரடி முடிவு!
Local
09 August 2026
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உறைந்து போயுள்ள கிரீன் பூட்ஸ்: 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்புப் பணிகள்
Local
09 August 2026
2027 ஒருநாள் உலகக் கிண்ணம் - நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்
Local
09 August 2026
LPL இறுதிப் போட்டி - கிண்ணத்தை வென்றது காலி அணி!
Local
08 August 2026
இலங்கையில் உச்சத்தைத் தொட்ட டெங்கு!
Local
08 August 2026
LPL இறுதிப் போட்டி - காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
Local
08 August 2026
கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்
Local
08 August 2026
எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!
Local
08 August 2026