International09 August 2026

மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!

யேமனில் நிலவும் மோதல்கள் மற்றும் சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, போதிய மருத்துவ வசதிகளின்றி இலட்சக்கணக்கான மக்கள் மாற்று மூலிகை மருத்துவங்களை நாடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தாஸ் பகுதியைச் சேர்ந்த ஜலீலா என்ற பெண், தனக்கு ஏற்பட்ட கல்லீரல் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை பெற முடியாமல், மூலிகை மருத்துவத்தை நாடி நோய் முற்றிய நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யேமனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் இயங்காத நிலையில், போலி மூலிகை மருத்துவர்கள் மற்றும் தேன் விற்பனையாளர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அறிவியல் பூர்வமற்ற இத்தகைய மூலிகை சிகிச்சைகளால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் மருத்துவ நிபுணர்கள், அரசாங்கம் இவ்வாறான மூலிகை மையங்கள் மீது உடனடி கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes