மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்காக அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதிலேயே அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
"உர மானியம் வழங்குதல், நீர்ப்பாசன அமைப்புகளைப் புனரமைத்தல் அல்லது சிறைச்சாலைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையைஅதிகரிப்பதால் வறுமையோ அல்லது வேலையின்மையோ தீரப்போவதில்லை.
மாறாக, ஒற்றைக் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் மறைமுக நோக்கமாகும். இதனால் நீதித்துறையின் சுயாதீனம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம்,எரிபொருள், உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது வரிகளை விதித்து மக்களைப் பீடித்துள்ளது.
அத்துடன், இளைஞர் கழகங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குக் கூட ஆளுங்கட்சியின் அலுவலகப் பட்டியலின் படியே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
வழக்குத் தாமதத்தைக் காரணம் காட்டி ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களுக்கான வெற்றிடங்களைக்கூட இதுவரை நிரப்பவில்லை.
நாட்டின் அபிவிருத்திக்கு பிராந்திய மற்றும் வீட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் தேசிய திட்டமொன்றே தற்போதைய முதன்மைத் தேவையாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
"உர மானியம் வழங்குதல், நீர்ப்பாசன அமைப்புகளைப் புனரமைத்தல் அல்லது சிறைச்சாலைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையைஅதிகரிப்பதால் வறுமையோ அல்லது வேலையின்மையோ தீரப்போவதில்லை.
மாறாக, ஒற்றைக் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் மறைமுக நோக்கமாகும். இதனால் நீதித்துறையின் சுயாதீனம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம்,எரிபொருள், உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது வரிகளை விதித்து மக்களைப் பீடித்துள்ளது.
அத்துடன், இளைஞர் கழகங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குக் கூட ஆளுங்கட்சியின் அலுவலகப் பட்டியலின் படியே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
வழக்குத் தாமதத்தைக் காரணம் காட்டி ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நீதியரசர்களுக்கான வெற்றிடங்களைக்கூட இதுவரை நிரப்பவில்லை.
நாட்டின் அபிவிருத்திக்கு பிராந்திய மற்றும் வீட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் தேசிய திட்டமொன்றே தற்போதைய முதன்மைத் தேவையாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.
Latest News
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
Local
10 August 2026
‘டேர்டெவில்’ திரைப்படத்தின் கதை இப்படி தான் இருக்கும்: மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்
Local
10 August 2026
சம்பளத்தில் மட்டுமல்ல... செல்வாக்கிலும் முன்னணியிலுள்ள நடிகைகளின் பட்டியல் வெளியீடு!
Local
10 August 2026
சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் மீதான பரீசிலனை ஒத்திவைப்பு
Local
10 August 2026
துறைமுக நகரில் குடியேறுவோருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை: எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை
Local
10 August 2026
சந்திக ஹதுருசிங்கவுக்கு 164,000 அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்
Local
10 August 2026
அன்று சூர்யாவைப் பார்க்க முடியாத ஏக்கம்... இன்று அவருக்கே ஜோடி! - மமிதா பைஜு கூறிய நெகிழ்ச்சிச் சம்பவம்!
Local
10 August 2026
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம்!
Local
10 August 2026
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்
Local
10 August 2026
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது
Local
10 August 2026