மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்கா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், கடந்த சில ஆண்டுகளாகத் தனது பெரும்பாலான நேரத்தைக் குளத்திலேயே கழித்து வரும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், தண்ணீருக்குள் இருக்கும்போது மட்டுமே அந்த எரிச்சல் குறைவதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளதுடன், தனது உடலுக்குள் 'ஜின்' எனப்படும் அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவர் நம்புகிறார்.
நீண்ட நேரமாகத் தண்ணீருக்குள் இருக்கும் பழக்கத்தால், அவரது தோல் நிறம் வெளிறிப் போய் உள்ளது. அத்துடன் சளி மற்றும் கடுமையான இருமலாலும் அவர் அவதிப்பட்டு வருகிறார்.
அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கக் குடும்பத்தினர் முயன்றபோதிலும், போதிய நிதி வசதி இல்லாததால் தொடர் மருத்துவ உதவியைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
நீரினால் ஏற்படும் ஒவ்வாமையான 'அக்வாஜெனிக் ப்ருரிடஸ்' (Aquagenic Pruritus) என்ற அரிய மருத்துவ நிலையாக இது இருக்கலாமோ என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், அந்த சிறுவனுக்கு தென்படும் அறிகுறிகள் இந்த நோயின் இயல்புக்கு நேர்மாறாக இருப்பதால், துல்லியமான காரணத்தைக் கண்டறியக் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் நிலை குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், அவர் இருக்கும் குளத்துக்கே சென்று அவருக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஆனால், தொடர்ந்து தண்ணீருக்குள்ளேயே இருப்பது அவரது உடல்நிலையை மேலும் சீர்குலைக்கும் என்பதால், அவருக்கு உடனடியாக உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், தண்ணீருக்குள் இருக்கும்போது மட்டுமே அந்த எரிச்சல் குறைவதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளதுடன், தனது உடலுக்குள் 'ஜின்' எனப்படும் அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவர் நம்புகிறார்.
நீண்ட நேரமாகத் தண்ணீருக்குள் இருக்கும் பழக்கத்தால், அவரது தோல் நிறம் வெளிறிப் போய் உள்ளது. அத்துடன் சளி மற்றும் கடுமையான இருமலாலும் அவர் அவதிப்பட்டு வருகிறார்.
அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கக் குடும்பத்தினர் முயன்றபோதிலும், போதிய நிதி வசதி இல்லாததால் தொடர் மருத்துவ உதவியைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
நீரினால் ஏற்படும் ஒவ்வாமையான 'அக்வாஜெனிக் ப்ருரிடஸ்' (Aquagenic Pruritus) என்ற அரிய மருத்துவ நிலையாக இது இருக்கலாமோ என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், அந்த சிறுவனுக்கு தென்படும் அறிகுறிகள் இந்த நோயின் இயல்புக்கு நேர்மாறாக இருப்பதால், துல்லியமான காரணத்தைக் கண்டறியக் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் நிலை குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், அவர் இருக்கும் குளத்துக்கே சென்று அவருக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஆனால், தொடர்ந்து தண்ணீருக்குள்ளேயே இருப்பது அவரது உடல்நிலையை மேலும் சீர்குலைக்கும் என்பதால், அவருக்கு உடனடியாக உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Latest News
10 வயதுச் சிறுமியிடம் முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக கூறப்படும் தந்தையும் தாத்தாவும் தலைமறைவு
Local
14 August 2026
மலேசியாவில் நடந்தது என்ன? - "கஞ்சிபானை இம்ரான்" விவகாரத்தில் வெளிவந்த உண்மை!
Local
14 August 2026
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு
Local
14 August 2026
கிழக்கு மாகாணத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் மோசடி!
Local
14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Local
14 August 2026
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026