தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (12) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவலை முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட போதே இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும், அவர்களின் படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மன்னார் தீவு மற்றும் இராமர் பாலம் என்பவற்றைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு விசேட கடற்றொழில் முகாமை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (12) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவலை முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட போதே இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும், அவர்களின் படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மன்னார் தீவு மற்றும் இராமர் பாலம் என்பவற்றைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு விசேட கடற்றொழில் முகாமை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
2026 உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
Local
13 August 2026
மனிதர்களின் மனநிலையை துல்லியமாக அறியும் நாய்கள்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!
Local
13 August 2026
விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!
Local
13 August 2026
செம்மணி புதைகுழியில் தொடரும் அதிர்ச்சி: 4 சிறார்கள் உட்பட 10 மனித என்புக்கூடுகள் அகழ்வு!
Local
13 August 2026
டொக்சிக் திரைப்பட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த புதிய தோற்றம்!
Local
13 August 2026
93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
Local
13 August 2026
வத்தளை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - இந்தியாவில் கைதான இரு சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
13 August 2026
பெறுமதி சேர் வரியை செலுத்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் - தவறும் பட்சத்தில் அபராதம்!
Local
13 August 2026
அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
Local
13 August 2026
எல் நினோ தாக்கம் - 2027 ஆம் ஆண்டு வரை வறட்சி தீவிரமடையும் அபாயம்!
Local
13 August 2026