நுவரெலியா, கித்துல்கலை பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு இதனை உறுதிபடுத்தினர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கித்துல்கலை காவல்துறையினர் அந்தப் பகுதியை பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட கைக்குண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த கைக்குண்டு அந்தப் பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அது எவ்வளவு காலமாக அங்கு இருந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், கைக்குண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு இதனை உறுதிபடுத்தினர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கித்துல்கலை காவல்துறையினர் அந்தப் பகுதியை பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட கைக்குண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த கைக்குண்டு அந்தப் பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அது எவ்வளவு காலமாக அங்கு இருந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், கைக்குண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
Latest News
பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை: காவல்துறை அதிரடி உத்தரவு!
Local
15 August 2026
விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா
Local
15 August 2026
வழமைக்குத் திரும்பியது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிப் போக்குவரத்து
Local
15 August 2026
சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த தகவல்களைத் திரட்டிய நபர் கைது
Local
15 August 2026
மத்திய கிழக்கு பதற்றம்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை மற்றும் ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு
Local
15 August 2026
பிரான்சில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு
Local
15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாகக் கொடியேற்றும் விஜய்!
Local
15 August 2026
ஹட்டன் - கொழும்பு வீதி திடீர் மூடல்! குயில்வத்தையில் மண் சரிவு!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுப்பு, இலங்கைக்கு ஆபத்தில்லை!
Local
15 August 2026
"மனம் நிறைந்துள்ளது..." – ரசிகர்களின் பெரும் வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
15 August 2026