யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 51ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன.
இதன்போது, நான்கு சிறார்களின் என்புக்கூடுகள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், புதிதாக 8 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 552 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 540 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த அகழ்வுப் பணிகளில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் காவல்துறையினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Latest News
8 வருட இரகசிய சேமிப்பு - ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்
Local
23 August 2026
பங்களாதேஷை வீழ்த்தி ஒரு இன்னிங்சாலும் 51 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி
Local
23 August 2026
ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து - நடந்தது என்ன?
Local
23 August 2026
மொனராகலையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா கைப்பற்றல் - சந்தேகநபர் கைது!
Local
23 August 2026
நாட்டின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி - வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக அதிகரிப்பு
Local
23 August 2026
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!
Local
23 August 2026
இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி - ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!
Local
23 August 2026
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
Local
23 August 2026
"இவர்தான் மருத்துவர்!" - மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!
Local
23 August 2026
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026