ஓமான் அருகே மசகு எண்ணெய் தாங்கிப் படகில் (டேங்கர்) ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு (Qeshm Island) கடலோரப் பகுதியில் எண்ணெய் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி (Kazem Gharibabadi) தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளே இந்த மாசுபாட்டிற்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
கடந்த ஜூன் மாதம் ஓமான் அருகே தரைதட்டியது முதல் 'கேரோலின் பெசெங்கி' (Caroline Bezengi) என்ற எண்ணெய் தாங்கிப் படகில் இருந்து கசிந்து வரும் மசகு எண்ணெய், சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளை அடையத் தொடங்கியுள்ளதாக ஓமான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானின் வளைகுடா கடற்கரைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நிர்வகிப்பதற்கான ஒரு வழிமுறையை ஈரான் "வரையறுத்து அமுல்படுத்த" வேண்டியதன் அவசியத்தை மேலும் உணர்த்துவதாக காசிம் கரீபாபாடி சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
பிலிப்பைன்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு - இரு மாணவர்கள் பலி!
Local
18 August 2026
ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன கைது!
Local
18 August 2026
'ஜெயிலர் 2' வெளியீட்டு திகதி திடீர் மாற்றம்? ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!
Local
18 August 2026
இந்தியா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்!
Local
18 August 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
18 August 2026
நாசா வரை எதிரொலித்த 'முதலமைச்சர் விஜய்யின் கை சைகை'
Local
18 August 2026
பலாலி காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் 5 பேருக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை
Local
18 August 2026
கைது செய்யப்பட்ட சமித்புர சது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு
Local
18 August 2026
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா.விடம் 'நீதியின் ஓலம்' பிரகடனம் கையளிப்பு
Local
18 August 2026
கஞ்சிப்பானை இம்ரானின் உறவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் : 05 பேர் கைது
Local
18 August 2026