International14 August 2026

பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரையின் ஜெனின் நகருக்கு அருகில் உள்ள 'கனிம்' என்ற பழைய யூத குடியேற்றப் பகுதியை இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறந்து வைத்தனர்.

கடந்த 2005-ம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்ட இந்த குடியேற்றத்திட்டம், தற்போது மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்றத்தை அமைக்கும் பணிகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும், அந்தப் பகுதியில் இருந்த பாலஸ்தீனியர்களின் வியாபாரத்தளங்களையும் சொத்துகளையும் இஸ்ரேலிய இராணுவம் தகர்த்துள்ளது.

இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைச் செயல்கள் இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் "செலவை ஏற்படுத்துகிறது" என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் முன்னர் குறிப்பிட்டிருந்தாலும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவுடன் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes