General15 August 2026

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாகக் கொடியேற்றும் விஜய்!

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில், தேசிய கீதத்தின் நீண்ட பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், ‘வந்தே மாதரம்’ பாடல் முதல் முறையாக இசைக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளை, சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கவுள்ளார்.

அவர் இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes