General15 August 2026

சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த தகவல்களைத் திரட்டிய நபர் கைது

சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பான தகவல்களை இரகசியமாகத் திரட்டி வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் சஹஸ்புர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், அண்மையில்; புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி ஒருவரின்; நெருங்கிய நண்பர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தெஹிவளை வட்டரப்பள வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் சந்தேகநபரின் உந்துருளியை செலுத்தியவரே தற்;போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

அத்துடன், புதிய மெகசின் சிறைச்சாலை மோதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இவர் பிணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள "கொஸ் மல்லி" எனப்படும் பாதாள உலகக் குழுத் தலைவருடனும் சந்தேகநபருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபரின் கைப்பேசியை சோதனையிட்ட காவல்துறையினர், அவருக்கும் "கொஸ் மல்லி"க்கும் இடையிலான பல தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

அந்த உரையாடல்களில் சிறைச்சாலை அதிகாரிகள் பற்றித் திரட்டப்பட்ட தகவல்களும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்த உரையாடல்களும் அடங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes