சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பான தகவல்களை இரகசியமாகத் திரட்டி வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் சஹஸ்புர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், அண்மையில்; புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி ஒருவரின்; நெருங்கிய நண்பர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தெஹிவளை வட்டரப்பள வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் சந்தேகநபரின் உந்துருளியை செலுத்தியவரே தற்;போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
அத்துடன், புதிய மெகசின் சிறைச்சாலை மோதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இவர் பிணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள "கொஸ் மல்லி" எனப்படும் பாதாள உலகக் குழுத் தலைவருடனும் சந்தேகநபருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபரின் கைப்பேசியை சோதனையிட்ட காவல்துறையினர், அவருக்கும் "கொஸ் மல்லி"க்கும் இடையிலான பல தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
அந்த உரையாடல்களில் சிறைச்சாலை அதிகாரிகள் பற்றித் திரட்டப்பட்ட தகவல்களும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்த உரையாடல்களும் அடங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Latest News
80ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தடுமாற்றம் - அயர்லாந்து கொடியை அணிந்தார் எனவும் விமர்சனம்!
Local
16 August 2026
சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள் 73 பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்: காவல்துறை மாஅதிபர்
Local
16 August 2026
"பாலம் கட்டும்போது படகோட்டிக்கு சிக்கல் ஏற்படுவது இயல்பே" – விமர்சனங்களுக்கு உவமையில் நளிந்த பதில்!
Local
16 August 2026
பொலித்தீன் பயன்பாட்டை 10 மில்லியன் அலகுகளால் குறைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறுகிறது!
Local
16 August 2026
சர்வதேச ரீதியில் இந்தியா குறித்த நேர்மறையான பார்வையில் இலங்கை முதலிடம் !
Local
16 August 2026
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி!
Local
16 August 2026
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!
Local
15 August 2026
மலையக ஆலயங்களைப் பதிவு செய்ய உடனடி நடவடிக்கை! – சுந்தரலிங்கம் பிரதீப் விசேட கோரிக்கை.
Local
15 August 2026
கல்கிசையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
Local
15 August 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் இந்து கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை!" – சுந்தரலிங்கம் பிரதீப் தகவல்.
Local
15 August 2026