கடந்த காலத்தில் வான் மற்றும் கடல் வழியாகக் கிலோ கணக்கில் பெருமளவு போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கு, அப்போதைய அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளின் மறைமுக ஆதரவும் அனுசரணையும் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால், விசாரணைகளில் தங்களது பெயர்கள் தெரிந்துவிடுமோ என்ற பயத்திலேயே அரசியல்வாதிகள் சிறைச்சாலை மோதல்களையும் கலவரங்களையும் பின்னணியில் இருந்து தூண்டிவிடுகின்றனர்.
கடந்த காலத்தில் சிறைச்சாலைகளுக்குள்ளிருந்தே போதைப்பொருள் வியாபாரம் தடையின்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய ஆட்சியின்கீழ் அது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய, நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளும் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இதுபோன்ற சதித்திட்டங்களைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எந்தக் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தாலும் இந்த அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Latest News
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
17 August 2026
அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
17 August 2026
பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
Local
17 August 2026
மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி
Local
17 August 2026
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: இரண்டு சிறுவர்களை மீட்டது கடற்படை!
Local
17 August 2026
கல்முனை ஆதார மருத்துவமனையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை
Local
17 August 2026
முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு தொடரும் கண்டனங்கள்!
Local
17 August 2026
பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
17 August 2026
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026