General15 August 2026

"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!

கடந்த கால ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்கள் தங்களது சுயதேவைகளுக்காகவும், தங்களது குற்றச்செயல்களை மறைத்துப் பாதுகாப்பதற்காகவே அரச ஊழியர்களையும் காவல்துறையினரையும் பயன்படுத்திக் கொண்டதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி குற்றச்செயல்களை ஒழிப்பதற்காகவே காவல்துறைக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிடிக்கவே முடியாது என்று கருதப்பட்ட பல முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும் இன்னும் சில தினங்களில் போதைப்பொருள் பின்னணியில் உள்ள பெரிய திமிங்கலங்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் அகப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து வருவதாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes