General15 August 2026

இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்

இலங்கையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் ஆலய நிர்வாகங்களுக்கு இடையே காணப்படும் பிளவுகளைத் தவிர்த்து, இந்துக்களை ஒன்றிணைக்கும் வலுவான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

பிராந்திய வேறுபாடுகள், பெரிய கோயில் – சிறிய கோயில் என்ற பாகுபாடுகள் மற்றும் கட்சி ரீதியான பிரிவினைகள் காரணமாக இந்து சமூகம் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மதங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது முடிவுகளை எடுப்பதற்கு மதப் பீடங்களும் ஒருங்கிணைந்த தலைமைத்துவமும் காணப்படுவதைப் போன்று, இந்து சமயத்திலும் அனைத்து பேதங்களையும் கடந்து ஒன்றிணையக்கூடிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்து கலாசார திணைக்களத்திற்கான பொறுப்புகள் தனக்கு வழங்கப்படாத நிலையிலும், இந்து சமய விவகாரங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தாம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்சி மற்றும் பிரதேசவாதங்களைத் தாண்டி இறைவனுக்காகவும் சமயத்திற்காகவும் இந்துக்கள் ஒன்றிணையும்போது மட்டுமே இந்து சமயத்தின் தொன்மையையும் வலிமையையும் பாதுகாக்க முடியும் என சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes