சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்த அவர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் உட்பட சுமார் 100 பேரைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஆதரவு தங்களது கிடைத்துள்ளதாகக் கூறிய காவல்துறை மா அதிபர், அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கனடா தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குடும்ப மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்த அவர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் உட்பட சுமார் 100 பேரைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஆதரவு தங்களது கிடைத்துள்ளதாகக் கூறிய காவல்துறை மா அதிபர், அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கனடா தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குடும்ப மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.
Latest News
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
17 August 2026
அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
17 August 2026
பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
Local
17 August 2026
மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி
Local
17 August 2026
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: இரண்டு சிறுவர்களை மீட்டது கடற்படை!
Local
17 August 2026
கல்முனை ஆதார மருத்துவமனையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை
Local
17 August 2026
முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு தொடரும் கண்டனங்கள்!
Local
17 August 2026
பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
17 August 2026
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026