திருகோணமலை- கிளிவெட்டி, குமாரபுரம் பகுதியில் 1996 ஆம் ஆண்டு தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு தொடர்பில், முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் அறுவரை விடுவித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரணையிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, 24 தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்தமை மற்றும் 25 பேருக்குக் காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 101 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த அறுவருக்கும் எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எனினும், 2016 ஆம் ஆண்டு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்தது.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன், இதுகுறித்த தகவலை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பணித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய நீதியசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், இரு நீதியரசர்களும் தனித்தனியாகத் தீர்ப்புரைகளை எழுதியுள்ளனர்.
சந்தேகநபர்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பின் போது பதிவு செய்யப்பட்ட சில பதிவுகளைச் சான்றுகளாகக் குறியீடு செய்ய அரசத் தரப்புக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்காதமை ஒரு தவறு என மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா முன்வைத்த வாதத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நீதியரசர் அமல் ரணராஜா தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில்; அடையாள அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, விசாரணையின் போது அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதிக்காததன் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதி ஒரு தொழில்நுட்பத் தவறைச் செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நீதியரசர் சுமுது பிரேமச்சந்திர தனது தீர்ப்புரையில்; அடையாள அணிவகுப்பு ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பமும் திகதியும் இல்லாமையைக் தீர்மானிக்கும் காரணியாக மேல் நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொண்டமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா மற்றும் அதனை மதிப்பிட முடியுமா என்பதிலேயே நீதிபதி கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 24 தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்தமை மற்றும் 25 பேருக்குக் காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 101 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த அறுவருக்கும் எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எனினும், 2016 ஆம் ஆண்டு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்தது.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன், இதுகுறித்த தகவலை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பணித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய நீதியசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், இரு நீதியரசர்களும் தனித்தனியாகத் தீர்ப்புரைகளை எழுதியுள்ளனர்.
சந்தேகநபர்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பின் போது பதிவு செய்யப்பட்ட சில பதிவுகளைச் சான்றுகளாகக் குறியீடு செய்ய அரசத் தரப்புக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்காதமை ஒரு தவறு என மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா முன்வைத்த வாதத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நீதியரசர் அமல் ரணராஜா தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில்; அடையாள அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, விசாரணையின் போது அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதிக்காததன் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதி ஒரு தொழில்நுட்பத் தவறைச் செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நீதியரசர் சுமுது பிரேமச்சந்திர தனது தீர்ப்புரையில்; அடையாள அணிவகுப்பு ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பமும் திகதியும் இல்லாமையைக் தீர்மானிக்கும் காரணியாக மேல் நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொண்டமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா மற்றும் அதனை மதிப்பிட முடியுமா என்பதிலேயே நீதிபதி கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
Local
17 August 2026
சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா?
Local
17 August 2026
'டிட்வா' சூறாவளி நிவாரண நிதியில் 70% செலவிடப்படாமல் உள்ளது!
Local
17 August 2026
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
17 August 2026
அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
17 August 2026
பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
Local
17 August 2026
மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி
Local
17 August 2026
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: இரண்டு சிறுவர்களை மீட்டது கடற்படை!
Local
17 August 2026