General17 August 2026

இணையவழி கட்டடப் பொருள் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாகக் கட்டடப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்துக் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அஸ்பெஸ்டாஸ் கூரைத் தகடுகள், சிமெந்து மற்றும் ஏனைய கட்டடப் பொருட்களைச் சந்தை விலையை விடக் கணிசமாகக் குறைந்த விலைக்குக் தருவதாக விளம்பரம் செய்து மோசடி நபர்கள் ஒப்பந்தங்களை பெறுகின்றனர்.

பின்னர் வாடிக்கையாளரின் பகுதியில் உள்ள உண்மையான வியாபாரி ஒருவரைத் தொடர்புகொண்டு, அந்தப் பொருட்களை வாடிக்கையாளரின் முகவரிக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்து, பணப் பரிவர்த்தனை போலியாக நடைபெற்றதாகக் காட்டுகின்றனர்.

பொருட்கள் வந்தடைந்ததும் ஓட்டுநர் பணம் கேட்கும் போதே தாம் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் உணர்கின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, சமூக வலைத்தளங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது விற்பனையாளர்களின் அடையாளம் மற்றும் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes