கடந்த சனிக்கிழமை சூரியனின் "விழுதுகள்” நிகழ்ச்சியில் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துக் கொண்டு இலங்கையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் ஆலய நிர்வாகங்களுக்கு இடையே காணப்படும் பிளவுகளைத் தவிர்த்து, இந்துக்களை ஒன்றிணைக்கும் வலுவான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஏனைய மதங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது முடிவுகளை எடுப்பதற்கு மதப் பீடங்களும் ஒருங்கிணைந்த தலைமைத்துவமும் காணப்படுவதைப் போன்று, இந்து சமயத்திலும் அனைத்து பேதங்களையும் கடந்து ஒன்றிணையக்கூடிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் விழுதுகள் நிகழ்ச்சியை மேற்கோள் காட்டிஇலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமயத்தில் செயற்பட்டு வருகின்ற அனைவரும் ஒருங்கிணைந்து, பரஸ்பர ஒத்துழைப்புடன் ஒரு முறையான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு திறந்த அழைப்பை விடுத்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்து, எமது நீண்டகால நிலைப்பாட்டுடனும் முயற்சிகளுடனும் ஒத்துப்போகின்ற ஒரு முக்கியமான அழைப்பாக நாம் கருதுகின்றோம்.
இந்து சமயத்தில் உள்ள குருமார்கள், சமய அறிஞர்கள், குருமார் அமைப்புகள் மற்றும் இந்து சமயத்திற்காக உண்மையாகப் பணியாற்றுகின்ற அனைத்து தரப்பினரும் வேறுபாடுகளைத் தாண்டி, ஒருங்கிணைந்து, ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒரு வலுவான தேசிய கட்டமைப்பு அவசியம் என்ற கருத்தை இதன் மூலம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ள இந்தத் திறந்த அழைப்பை ஒரு அரசியல் அழைப்பாக அல்லாமல், இந்து சமயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்குமான ஒரு ஆக்கபூர்வமான வாய்ப்பாகவே தாம் பார்ப்பதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Latest News
ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!
Local
23 August 2026
பேருந்தை விற்றுப் பணம் கொடுத்த உரிமையாளர்: போலி விமானி சிக்கியது எப்படி?
Local
23 August 2026
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026
தொடருந்து நிலைய அதிகாரியான பூனை! மும்பை மெட்ரோவின் வைரல் 'தலைமைப் பூனை அதிகாரி'!
Local
23 August 2026
"நயன்தாரா படம் பார்க்க அடித்துப் பிடித்து நுழைவுச்சீட்டு வாங்கிய கவின்: வைரலாகும் சுவாரஸ்ய தகவல்!"
Local
23 August 2026
வாடகை வீடு தேடச் சென்று AI நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெற்ற இளம்பெண்: சுவாரஸ்ய சம்பவம்!"
Local
23 August 2026
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் மீன் வளர்ப்பு திட்டம்: மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் வாய்ப்பு
Local
23 August 2026
தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கம்பஹா பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
Local
23 August 2026
வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் மூழ்கியது பனாமா சரக்குக் கப்பல்: இந்தியப் படைகள் தீவிர மீட்பு நடவடிக்கை!
Local
22 August 2026