General17 August 2026

கல்முனை ஆதார மருத்துவமனையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை

கல்முனை ஆதார மருத்துவமனையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, மருத்துவமனையின் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை இன்று முன்னெடுத்தனர்.

மருத்துவமனை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் அவர்களுக்கான அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய சிற்றூழியர்களின் நியமனம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதுடன், மருத்துவமனையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes