General17 August 2026

கடந்த 16 நாட்களில் 6,900க்கும் அதிகமானோருக்கு டெங்கு: கம்பஹாவில் உச்சகட்ட அச்சுறுத்தல்!

இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 16 நாட்களில் 6,914 டெங்கு நோயாளர்கள் பதிவானதை அடுத்தே இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் அதிகபட்சமாக 21.32 சதவீதமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes