நடப்பு ஆண்டில் நிலவும் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90 சதவீத வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என கணிப்புகள் காட்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழும் மக்களின் உடல் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு அவதானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே பெய்யும் மழை காரணமாக இந்த நிலைமை குறைவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சராசரியாக 37 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய நீர் இருப்பு சிறுபோக பருவம் வரைக்கும், எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மழைக்காலம் வரைக்கும் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நீரியல் வள முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எச்.என்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வறட்சியான காலநிலை நிலவிய போதிலும், நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீத கொள்ளளவில் இயங்கி வருவதாகவும், குடிநீர் விநியோகம் குறைக்கப்படவில்லை என்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என கணிப்புகள் காட்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழும் மக்களின் உடல் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு அவதானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே பெய்யும் மழை காரணமாக இந்த நிலைமை குறைவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சராசரியாக 37 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய நீர் இருப்பு சிறுபோக பருவம் வரைக்கும், எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மழைக்காலம் வரைக்கும் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நீரியல் வள முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எச்.என்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வறட்சியான காலநிலை நிலவிய போதிலும், நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீத கொள்ளளவில் இயங்கி வருவதாகவும், குடிநீர் விநியோகம் குறைக்கப்படவில்லை என்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
Latest News
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
Local
19 August 2026
செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு
Local
19 August 2026
வாடகை வாகனப் பயணிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்
Local
19 August 2026
"ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்" - நடிகை தமன்னா ஆதங்கம்!
Local
19 August 2026
2028-க்குப் பின் கடன்களைச் செலுத்த இலங்கை மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டும்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
Local
19 August 2026
காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Local
19 August 2026
காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள்: விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு
Local
19 August 2026
ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்
Local
19 August 2026
டிட்வா சூறாவளி புனரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி: ADB உடன் $200 மில்லியன் கடன் ஒப்பந்தம்
Local
19 August 2026
பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகை பறிமுதல்: மாத்தறை நீதிமன்றம் உத்தரவு
Local
19 August 2026