நடப்பு ஆண்டில் நிலவும் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90 சதவீத வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என கணிப்புகள் காட்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழும் மக்களின் உடல் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு அவதானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே பெய்யும் மழை காரணமாக இந்த நிலைமை குறைவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சராசரியாக 37 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய நீர் இருப்பு சிறுபோக பருவம் வரைக்கும், எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மழைக்காலம் வரைக்கும் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நீரியல் வள முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எச்.என்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வறட்சியான காலநிலை நிலவிய போதிலும், நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீத கொள்ளளவில் இயங்கி வருவதாகவும், குடிநீர் விநியோகம் குறைக்கப்படவில்லை என்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என கணிப்புகள் காட்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழும் மக்களின் உடல் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு அவதானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே பெய்யும் மழை காரணமாக இந்த நிலைமை குறைவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சராசரியாக 37 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய நீர் இருப்பு சிறுபோக பருவம் வரைக்கும், எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மழைக்காலம் வரைக்கும் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நீரியல் வள முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எச்.என்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வறட்சியான காலநிலை நிலவிய போதிலும், நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீத கொள்ளளவில் இயங்கி வருவதாகவும், குடிநீர் விநியோகம் குறைக்கப்படவில்லை என்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
Latest News
அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம்!
Local
19 August 2026
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!
Local
19 August 2026
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களைப் பரப்பியவருக்கு விளக்கமறியல்
Local
19 August 2026
சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய ஒருங்கிணைந்த பொறிமுறை – நீதியமைச்சர்
Local
19 August 2026
தெஹிவலை மிருகக்காட்சிசாலையின் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
Local
19 August 2026
போக்குவரத்து அபராதங்களை செப்டம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும்!
Local
19 August 2026
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026
அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்
Local
19 August 2026
அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்
Local
19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026