General18 August 2026

நில்திய தடாகப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

பதுளை, எல்ல - கரந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள 'நில்திய தடாகம்' குகைப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்தி, விசேட கண்காணிப்பின் கீழ் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இராவண எல்ல சரணாலயத்தின் உள் குகைத் தொகுதியில் அமைந்துள்ள இந்த தடாகம், மிகவும் அரியவகை இயற்கை நீர் மூலமாகும்.

இதன் விசேட புவியியல் பண்புகள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே இது பிரபலமடைந்துள்ள நிலையில், இந்த இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்காகச் சுற்றுலா நடவடிக்கைகளைக் கண்காணித்து முறைப்படுத்துவது அவசியமாகக் கண்டறியப்பட்டது.

இதற்கமைய, பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடுவதற்காக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes