இலங்கையில் பயணிகள் ட்ரோன் (Passenger Drone) சேவையை அடுத்த மாதம் சோதித்துப் பார்க்கத் திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த 6 மாதங்களுக்குள் வர்த்தக ரீதியிலான சேவைகளைத் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
முதற்கட்டத் திட்டத்தின் கீழ், இந்த பயணிகள் ட்ரோன்கள் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களை இலக்காகக் கொண்ட இரண்டு வான்வழி மார்க்கங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னோடித் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளாக கொழும்பிலிருந்து தெற்கு கடலோரப் பகுதி வரையிலும், கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து கொழும்பு துறைமுக நகரம் (Port City) வரையிலும் வான்வழி மார்க்கங்களை அமைப்பதில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டு ட்ரோன் வானூர்திகள் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன், திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் பயண மார்க்கங்களுக்கான விரிவான வரைபடங்கள் தயாரிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவசரகால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை, கடல்சார் பயன்பாடுகள் மற்றும் கடற்படைத் தேவைகளுக்காகவும் இதனைப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
இந்த வகை ட்ரோன்கள் தரையிறங்குவதற்கும் வானேறுவதற்கும் மிகக் குறைந்த இடமே போதுமானது என்பது இதன் முக்கியமான சிறப்பம்சம் எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், ஆரம்ப சோதனைகளைத் தொடர்ந்து 6 மாத காலத்துக்குள் நாட்டில் வர்த்தக ரீதியிலான பயணிகள் ட்ரோன் சேவையை முறைப்படியாக நிறுவ அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
முதற்கட்டத் திட்டத்தின் கீழ், இந்த பயணிகள் ட்ரோன்கள் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களை இலக்காகக் கொண்ட இரண்டு வான்வழி மார்க்கங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னோடித் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளாக கொழும்பிலிருந்து தெற்கு கடலோரப் பகுதி வரையிலும், கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து கொழும்பு துறைமுக நகரம் (Port City) வரையிலும் வான்வழி மார்க்கங்களை அமைப்பதில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டு ட்ரோன் வானூர்திகள் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன், திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் பயண மார்க்கங்களுக்கான விரிவான வரைபடங்கள் தயாரிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவசரகால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை, கடல்சார் பயன்பாடுகள் மற்றும் கடற்படைத் தேவைகளுக்காகவும் இதனைப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
இந்த வகை ட்ரோன்கள் தரையிறங்குவதற்கும் வானேறுவதற்கும் மிகக் குறைந்த இடமே போதுமானது என்பது இதன் முக்கியமான சிறப்பம்சம் எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், ஆரம்ப சோதனைகளைத் தொடர்ந்து 6 மாத காலத்துக்குள் நாட்டில் வர்த்தக ரீதியிலான பயணிகள் ட்ரோன் சேவையை முறைப்படியாக நிறுவ அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
Latest News
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
Local
20 August 2026
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 August 2026
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
Local
20 August 2026
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!
Local
20 August 2026
கல்கிசை துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது
Local
19 August 2026
செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பினார் புடின்!
Local
19 August 2026
35 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கெடுப்பு மூலம் தேர்வு!
Local
19 August 2026
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
Local
19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!
Local
19 August 2026