இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில் உள்ள சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களை உடனடியாக அகற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இந்த விடயத்தை முன்வைத்த அவர், நாட்டுக்குத் திரும்பும் ஏதிலிகளின் குடியுரிமையை உறுதிப்படுத்துதல், பாதுகாப்புப் பிரிவின் அனுமதி பெறல், பயண ஆவணங்களைப் பெறுதல், காணி, வீடமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றில் தொடர்ந்து பல்வேறு நிச்சயமற்ற நிலைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, யுத்த காலத்தில் உத்தியோகபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைச் பிரஜைகள் எதிர்கொள்ளும் சட்டத் தடைகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அமைச்சரவையின் அனுமதியுடன் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்புவார்களாயின், இந்தியாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் அல்லது துணை உயர்ஸ்தானிகரகங்களை அணுகித் தங்களின் குடியுரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் விளக்கமளித்தார்.
விண்ணப்பதாரர்கள் தங்களிடம் உள்ள அடையாள மற்றும் குடியுரிமை ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், அரச புலனாய்வுச் சேவை (SIS) மூலமாகப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற நாடாளுமன்ற சாணக்கியன் இராசமாணிக்கம், ஏதிலிகள் மீண்டும் திரும்பும் நடைமுறைகள், ஆவணத் தேவைகள், பாதுகாப்புப் பெறல் மற்றும் வருகைக்குப் பின்னரான உதவிகள் தொடர்பில் தெளிவான வழிகாட்டுதல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், மீண்டும் திரும்பும் குடும்பங்களுக்கு காணி, வீடமைப்பு, இழப்பீடு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கும் பொருட்டு ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டுமெனவும், சட்ட மாற்றங்களுடன் நடைமுறைச் சாத்தியமான ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இந்த விடயத்தை முன்வைத்த அவர், நாட்டுக்குத் திரும்பும் ஏதிலிகளின் குடியுரிமையை உறுதிப்படுத்துதல், பாதுகாப்புப் பிரிவின் அனுமதி பெறல், பயண ஆவணங்களைப் பெறுதல், காணி, வீடமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றில் தொடர்ந்து பல்வேறு நிச்சயமற்ற நிலைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, யுத்த காலத்தில் உத்தியோகபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைச் பிரஜைகள் எதிர்கொள்ளும் சட்டத் தடைகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அமைச்சரவையின் அனுமதியுடன் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்புவார்களாயின், இந்தியாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் அல்லது துணை உயர்ஸ்தானிகரகங்களை அணுகித் தங்களின் குடியுரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் விளக்கமளித்தார்.
விண்ணப்பதாரர்கள் தங்களிடம் உள்ள அடையாள மற்றும் குடியுரிமை ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், அரச புலனாய்வுச் சேவை (SIS) மூலமாகப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற நாடாளுமன்ற சாணக்கியன் இராசமாணிக்கம், ஏதிலிகள் மீண்டும் திரும்பும் நடைமுறைகள், ஆவணத் தேவைகள், பாதுகாப்புப் பெறல் மற்றும் வருகைக்குப் பின்னரான உதவிகள் தொடர்பில் தெளிவான வழிகாட்டுதல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், மீண்டும் திரும்பும் குடும்பங்களுக்கு காணி, வீடமைப்பு, இழப்பீடு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கும் பொருட்டு ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டுமெனவும், சட்ட மாற்றங்களுடன் நடைமுறைச் சாத்தியமான ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Latest News
வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிப்பு
Local
20 August 2026
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை
Local
20 August 2026
சமூக ஊடக விளம்பரத்துக்காக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணம் செய்து உயிரிழந்த இளைஞர்கள்!
Local
20 August 2026
இந்தியருக்கு பிணை வழங்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
Local
20 August 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
20 August 2026
ட்ரம்ப் அறிவிப்பு: ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரத் நடவடிக்கை
Local
20 August 2026
விசா விண்ணப்பங்கள் குறித்து அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!
Local
20 August 2026
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
Local
20 August 2026
இலங்கை சுங்கத்தின் பாரிய மோசடி - நண்பரை பாதுகாக்கிறாரா ஜனாதிபதி?
Local
20 August 2026
பாகிஸ்தானில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர்!
Local
20 August 2026