இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருவருக்கு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்குப் பிணை வழங்குவதற்காகப் பணம் பெற்றது, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹ_சைன் மொஹமத் மற்றும் ஹசித் மொஹமத் ஆகிய இருவர் மீதே நீண்ட விசாரணையின் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் தரப்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை.
இதன்போது. தமக்கு நீதி வழங்குமாறு அவர்கள் கோரியதுடன், தனக்கு ஒரு சிறிய குழந்தை உள்ளதையும் கருத்தில் கொள்ளுமாறு முதலாவது சந்தேகநபர் கோரிக்கை விடுத்தார்.
எனினும்,பணத்திற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை வழங்குவோருக்கு சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் வகையில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மோசடி விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரினர்.
இந்தநிலையில், சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற்கொண்ட பிரதான நீதிவான், இரு குற்றவாளிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். எனினும், குற்றவாளிகள் ஏற்கனவே ஆறு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியை அவர்களது தண்டனைக்காலத்திலிருந்து கழித்துக் கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.
Latest News
வடக்கு - கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு!
Local
22 August 2026
மைதானத்தில் ஸ்டார்கை நேர்காணல் செய்த மனைவி!
Local
22 August 2026
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு
Local
22 August 2026
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026
எதிர்கால மனைவி குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
22 August 2026
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது நிறுத்தம்
Local
22 August 2026
போலி பன்னீர் விற்பனைக்கு கர்நாடகாவில் ஒராண்டு தடை!
Local
22 August 2026