General20 August 2026

மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் புதிய தகவல் முறைமை அறிமுகம்

மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம், பல்கலைக்கழக மாணவர்களுக்காக புதிய தகவல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய முறைமையின் மூலம் மாணவர்கள் தங்களது மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான விபரங்களை இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என மகாபொல நிதியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இந்த மாதம் முதல் www.mahapola.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இந்த புதிய முறைமையை அணுகி, கொடுப்பனவுகள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Related recommendation
Hiru TV News | Programmes