அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, இதற்காக தமிழ் மக்களையோ அல்லது தமிழ் அதிகாரிகளையையோ குற்றம்சாட்டுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்துக்கள் பொட்டு அல்லது திருநீறு அணிவதும், பௌத்தர்கள் கையில் பிரித் நூல் அணிவதும் அவர்களின் மத அடையாளங்களுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்ட அவர், அதேபோன்று முஸ்லிம் பெண்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிவதும் மத சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்தார்.
எனவே, அரச ஊழியர்கள் தமது மத அடையாளங்களைப் பேணியவாறு பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தெளிவான சுற்றுநிருபங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த கால அரசியல் முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படக் கூடாது எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளித்த சிலர், முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வதற்கு ஆதரவளித்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவற்றைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொண்டு, எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், கல்முனை மருத்துவமனை தொடர்பான விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரிகளையும் அப்பகுதி மக்களையும் இனவாதிகளாகச் சித்தரிக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மதம் மற்றும் இன அடையாளங்கள் தொடர்பான விவகாரங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தாமல், அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Latest News
“இதுவே எனது கடைசி உரையாக இருக்கலாம்” – சபையில் இராமநாதன் அர்ச்சுனா நெகிழ்ச்சி
Local
20 August 2026
நந்தாமாலினி காலமானார்
Local
20 August 2026
இராஜகிரிய பகுதியில் காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு
Local
20 August 2026
முஸ்லிம் தாதியர்களின் ஆடை விவகாரம் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா கேள்வி
Local
20 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!
Local
20 August 2026
“சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போல துடிக்கிறார்கள்” – சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவேசம்!
Local
20 August 2026
தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவா? – ஜி.வி.பிரகாஷின் அதிரடி பதில்!
Local
20 August 2026
ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை – வழக்கு செப்டம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
20 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு – நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டு
Local
20 August 2026
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை!
Local
20 August 2026