நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு, நீதித்துறை மீதான செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாக இருக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்குமே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை அதிகரிப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, இது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாகவும், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கும் நாமல் ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
Latest News
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026
நீதி அமைச்சர் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் - தினன தகுண கண்டனம்!
Local
22 August 2026
வடக்கு - கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு!
Local
22 August 2026
மைதானத்தில் ஸ்டார்கை நேர்காணல் செய்த மனைவி!
Local
22 August 2026
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு
Local
22 August 2026
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026