தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த அரசாங்கக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகைக் கொடுப்பனவாக அரசாங்கம் 200 ரூபாவை வழங்கி வருகின்றது.
இந்தத் தொகையை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 500 ரூபாவாக அதிகரிப்பதுடன், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இந்தக் கொடுப்பனவைப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தகவல்களின்படி சுமார் 73 ஆயிரத்து 500 தொழிலாளர்களே தற்போது இந்த 200 ரூபாய் கொடுப்பனவைப் பெற்று வருகின்றனர்.
எனினும், பெருந்தோட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும், ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், 60 வயதைக் கடந்தும் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கொடுப்பனவில் உள்ளடக்கப்படவில்லை எனவும் கணபதி கனகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால், தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு இலட்சமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர்கள் தற்போது அதிகரித்துள்ள வேலைச் சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வகையில் சம்பள நடைமுறை திருத்தப்பட்டு, அது அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு 500 ரூபாவாக அதிகரிக்கப்படும் நிலையில், அதற்கேற்ற வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் தோட்ட உரிமையாளர்களும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என கணபதி கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
வெள்ளை மாளிகையின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்கு தொடர அனுமதி
Local
22 August 2026
பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து: தொடரிலும் முன்னிலை
Local
22 August 2026
'தி சைக்கிள் ஒஃப் லவ்'- திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா
Local
22 August 2026
மூடப்பட்ட குடியேற்றத் தி;ட்டத்தை திறந்த இஸ்ரேல்: உச்சக்கட்ட பதற்றத்தில் பாலஸ்தீனர்கள்;
Local
22 August 2026
மருத்துவ பரிசோதனையின் பின்னர் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்
Local
22 August 2026
வீரர்-வீராங்கனைகளுக்கு வெப்பத்துக்கு எதிரான பாதுகாப்பை வலியுறுத்தும் தென்கொரியா
Local
22 August 2026
உலக கிண்ணத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள்: ஆர்ஜன்டீனாவுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதம்
Local
22 August 2026
ஸ்வீடன் பாடசாலை ஒன்றில் வாள் தாக்குதல்: பலர் காயம்
Local
22 August 2026
யுக்ரைன்- ரஷ்ய போர்: அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்புகள்
Local
22 August 2026
பாலஸ்தீன எக்சன் அமைப்பினர் பயங்கரவாதிகள் அல்லர்: தீர்ப்பு வெளியானது
Local
22 August 2026