குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றம் சாட்டப்பட்ட ஷஷி வீரவன்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும்,ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக பிரதம நீதவான் தெரிவித்தார்.
எனினும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஷஷி வீரவன்ச சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தனது சேவை பெறுநர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மேன்முறையீடு தொடர்பில் அடுத்த மாதம் காரணங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதால், அதுவரை அவரை முன்பிணையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 42 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை இருப்பதாகவும், அதன்படி அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதைக் கருத்திற்கொண்டு, அதற்கான அறிவிப்புக்கு உட்பட்டு ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வழக்கை மீண்டும் செப்டம்பர் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றம் சாட்டப்பட்ட ஷஷி வீரவன்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும்,ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக பிரதம நீதவான் தெரிவித்தார்.
எனினும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஷஷி வீரவன்ச சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தனது சேவை பெறுநர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மேன்முறையீடு தொடர்பில் அடுத்த மாதம் காரணங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதால், அதுவரை அவரை முன்பிணையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 42 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை இருப்பதாகவும், அதன்படி அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதைக் கருத்திற்கொண்டு, அதற்கான அறிவிப்புக்கு உட்பட்டு ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வழக்கை மீண்டும் செப்டம்பர் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest News
முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த பரிசீலனை!
Local
23 August 2026
இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Local
23 August 2026
மட்டக்களப்பில் உந்துருளி விபத்து: இரு மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்!
Local
23 August 2026
ஹக்கலையில் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!
Local
23 August 2026
நாடு முழுவதும் வறட்சி உக்கிரம்: விவசாயம் பாதிப்பு - 72,000க்கும் மேற்பட்டோருக்குப் குடிநீர் விநியோகம்!
Local
23 August 2026
பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!
Local
23 August 2026
8 வருட இரகசிய சேமிப்பு - ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்
Local
23 August 2026
பங்களாதேஷை வீழ்த்தி ஒரு இன்னிங்சாலும் 51 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி
Local
23 August 2026
ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து - நடந்தது என்ன?
Local
23 August 2026
மொனராகலையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா கைப்பற்றல் - சந்தேகநபர் கைது!
Local
23 August 2026