கொழும்பு துறைமுக நகர் என்று கூறப்படும் போர்ட் சிட்டி பகுதியில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் 3 சீன சந்தேகநபர்களை இலங்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜூலை 23ஆம் திகதியன்று கொழும்பு துறைமுக நகரில் வைத்து, இரண்டு சீனர்கள் மீது மற்றுமொரு சீனக்குழுவினர் தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவர் கடத்தி, உயிரிழந்ததாக காவலர்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 2 சீன நாட்டவர்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள 3 பேரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், அவர்களின் விசா காலம் முடிவடைந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வானூர்தி அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கலாம் எனவும் காவல்துறையினர் எச்சரி;த்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்தவர்களின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கொழும்பு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை 071-8591735 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
Latest News
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது- நள்ளிரவு முதல் அமுல்!
Local
30 August 2026
சைப்ரஸ் அருகே கவிழ்ந்த பயணிகள் கப்பல்: 7 பேர் பலி - 23 பேர் மாயம்!
Local
30 August 2026
குருந்தூர் விகாரைக்கான காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!
Local
30 August 2026
900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய நேபாளப் பாடசாலை அதிபரின் துரித நடவடிக்கை!
Local
30 August 2026
பேரழிவை ஏற்படுத்திய தீடீர் அனர்த்தம்: நேபாளம் - திபெத்தில் 804 உடல்கள் மீட்பு
Local
30 August 2026
நான் பெயரை மாற்றவில்லை - அர்ஜுன மகேந்திரன் கடிதம்
Local
30 August 2026
நுவரெலியா மாவட்டத்துக்கு ரூ. 997 மில்லியன் பெறுமதியான 786 புதிய அபிவிருத்தித் திட்டங்கள்!
Local
30 August 2026
திபெத்தில் அடுத்தடுத்து மண்சரிவு: புதிதாக உருவான தடுப்பு ஏரியால் பரபரப்பு!
Local
30 August 2026
தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் வேதனத்தில் வேலை கொடுத்த சிறுவன்!
Local
30 August 2026
ஒருநாள் உலகக்கிண்ண தொடர் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக திலக் வர்மாவை பரிசீலிக்கும் BCCI!
Local
30 August 2026