கொழும்பு துறைமுக நகர் என்று கூறப்படும் போர்ட் சிட்டி பகுதியில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் 3 சீன சந்தேகநபர்களை இலங்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜூலை 23ஆம் திகதியன்று கொழும்பு துறைமுக நகரில் வைத்து, இரண்டு சீனர்கள் மீது மற்றுமொரு சீனக்குழுவினர் தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவர் கடத்தி, உயிரிழந்ததாக காவலர்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 2 சீன நாட்டவர்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள 3 பேரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், அவர்களின் விசா காலம் முடிவடைந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வானூர்தி அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கலாம் எனவும் காவல்துறையினர் எச்சரி;த்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்தவர்களின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கொழும்பு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை 071-8591735 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
Latest News
என் மகன் தீவிரவாதி அல்ல" - நடிகர் யாஷின் தாயார் புஷ்பா ஆதங்கம்
Local
31 August 2026
சுடுபடைக்கலன்கள் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
31 August 2026
தேசியப் பட்டியல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் – ரவூப் ஹக்கீம் விளக்கம்!
Local
31 August 2026
பாதுகாப்பு வலையத்தை உடைத்த விஜய், அஜித் - ஜி.வி.பிரகாஷ் புகழாரம்
Local
31 August 2026
வலுவடையும் எல் நினோ - அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை!
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு!
Local
31 August 2026
பெற்றோல் விலை குறைப்பு - முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா?
Local
31 August 2026
என்னை வைத்து படம் எடுத்தால் படம் 100 கோடி ஹிட்டடிக்கும் - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேச்சு!
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குப் பிணை
Local
31 August 2026
இலக்கைக் கடந்தது அரசாங்கத்தின் நெல் கொள்வனவு: 46,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகம் கொள்முதல்!
Local
31 August 2026